News November 4, 2025
மயிலாடுதுறை: பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

மேமாத்தூரைச் சேர்ந்தவர் குமார் (40) தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 4, 2025
மயிலாடுதுறை: ஒரே மாதத்தில் 180 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையால் கடந்த அக்டோபர் மாதம் குட்கா பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சுமார் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய 43 பேர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 180 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 4, 2025
மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

மயிலாடுதுறையில் மாவட்டத்தில் 31 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 4, 2025
மயிலாடுதுறை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <


