News January 10, 2026
மயிலாடுதுறை: புதிய ஐஜி பொறுப்பேற்பு – எஸ்.பி வாழ்த்து

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக வே. பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பும் காவல்துறை தலைவராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற காவல் உயர் அதிகாரிக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News February 4, 2026
மயிலாடுதுறை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

மயிலாடுதுறை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News February 4, 2026
மயிலாடுதுறை: WhatsApp பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தங்களது WhatsApp-க்கு வரும் பங்குசந்தை முதலீடு குறித்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
News February 4, 2026
மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

சீர்காழி அருகே உள்ள கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நேற்று சில ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ஆமைகள் விசைப்படகுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


