News October 14, 2025
மயிலாடுதுறை: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், நாளை காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்.15,17,18-ல் புதுகை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட , மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 13, 2025
மயிலாடுதுறை: 10th பாஸ் போதும்.. அரசு வேலை!

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே<