News October 3, 2025
மயிலாடுதுறை: பராமரிப்பு பணிக்காக மேம்பாலம் மூடல்

மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதனால் நேற்று இரவு 12 மணி முதல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் பாராமல் நாளை முதல் மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மூவலூர் – மாப்படுகை சாலையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 3, 2025
மயிலாடுதுறை: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

சீர்காழியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக சீர்காழியில் அமைந்துள்ள அன்பாலயா ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இன்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் டி எல் ஓ மாவட்ட திட்ட தொடர்பாளர் விஜய் அமிர்தராஜ் நாங்கூர். அரசு பள்ளி திட்ட அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
News October 3, 2025
மயிலாடுதுறை: 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் விற்பனை செய்துகொண்டிருந்த சதீஷ்குமார் என்பவரை போலீசார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடமிருந்து 150 மதுபாட்டில் 110 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News October 3, 2025
மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க