News March 20, 2024
மயிலாடுதுறை பயணிகளுக்கு ஓர் தகவல்

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற தேர்த் திருவிழா நாளை மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு செல்வோர் காலை 7.10 மணிக்கு உள்ள ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வருகை தர காலை 9.30 மணிக்கு திருவாரூரில் ரயில் இருப்பதாக அறிவித்தனர்.
Similar News
News April 8, 2025
இளைஞரின் நற்செயலை பாராட்டிய எஸ்.பி

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் சாலை ஓரத்தில் கிடந்த ரூ.10,000 பணத்தை அவ்வழியாக சென்ற ஹேமந்த் குமார் என்பவர் எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ஹேமந்த் குமாரின் நற்செயலை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று ஹேமந்த்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார்.
News April 7, 2025
தபால் நிலையங்களில் ஆதார் முகாம்

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் ப்ராஜெக்ட் ஆரோ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை ஆர் எஸ், நீடூர், பேரளம் ஆகிய தபால் நிலையங்களில் ஒரு மாத காலம் ஆதார் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
News April 7, 2025
Way2News செய்தி எதிரொலி: திறக்கப்பட்ட கழிப்பறை

கடந்த மாதம் Way2News செய்தியில் சீர்காழி திருமுல்லைவாசல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதாக செய்தியானது வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது அந்த கழிப்பறை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் மகிழ்ச்சியோடு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.