News December 21, 2025

மயிலாடுதுறை: பணி நியமன ஆணைகள் வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையாரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் MLA நிவேதா முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Similar News

News December 30, 2025

மயிலாடுதுறை காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

image

சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் வெகுஜன விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மணல்மேடு பட்டவர்த்தியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், சமூக நீதிக்கான விளக்கம், மனித உரிமையின் வகைகள், மனித உரிமை மீறல் மற்றும் அதற்கான தண்டனைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News December 30, 2025

மயிலாடுதுறை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

மயிலாடுதுறை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

News December 30, 2025

மயிலாடுதுறை: பசு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 15 உயர்த்தி வழங்க கூறி நேற்று பசு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!