News February 26, 2026
மயிலாடுதுறை: தேதி மாற்றம் – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(பிப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அரசு சார்ந்த நிர்வாக காரணங்களால் நாளை நடைபெற இருந்த கூட்டம் மார்ச் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2026
மயிலாடுதுறை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..

மயிலாடுதுறை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!
News February 26, 2026
மயிலை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 26, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியினை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு, உதவியாளர்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்18 மாதங்களுக்கு தனியார் வெளி முகமை மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியுடைய தனியார் முகமைகள் பிப்.28 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


