News December 15, 2025
மயிலாடுதுறை: தீர்த்தவாரியில் திரண்ட பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் நேற்று கார்த்திகை கடைசி ஞாயிறு கடை முக தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக குத்தாலம் பகுதியில் உள்ள 6 கோயில்களை சேர்ந்த சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி காவிரி தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 10, 2026
மயிலாடுதுறை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
மயிலாடுதுறை: வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்

மயிலாடுதுறை சட்டமன்ற வேட்பாளராக நாதக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருவெண்காடு காசிராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் வாக்கு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 10, 2026
மயிலாடுதுறை: ஊழியரிடம் லட்ச கணக்கில் பணம் அபேஸ்

மதுரை சேர்ந்த தனியார் பெயிண்ட் நிறுவன ஊழியர் ஆறுமுகம்(54). இவர் மயிலாடுதுறையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுப்பிய பெயிண்டுக்கான தொகையை வசுலிக்க வந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 1.90 லட்சம் வசூல் பணத்தை காணவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து cctv காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


