News April 15, 2024
மயிலாடுதுறை: திருமுலைப்பால் ஐதீக திருவிழா

சீர்காழியில் தேவார பாடல்பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரம்மதீர்த்தம் கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். அவ்வாறு இன்று காலை சட்டை நாதர் கோயில் தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
Similar News
News April 13, 2025
மயிலாடுதுறை: சித்திரை சிறப்பு ஆதார் முகாம்

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும்,அதன் கீழ் இயங்கும் 20 துணை அஞ்சலகங்களிலும் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மேகா ஆதார் முகாம் நடைபெறவுள்ளது இந்த முகாமில் ஆதார் குறித்த அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால், மக்கள் பயன்படுத்தி கொள்ளவும். SHARE பண்ணுங்க.
News April 13, 2025
மயிலாடுதுறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள FIELD MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..
News April 12, 2025
மயிலாடுதுறை: வேண்டியதை அருளும் பிரம்மபுரீஸ்வரர்

மயிலாடுதுறை மாவட்டம் திருமயானம் ஊரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான பிரம்மபுரீஸ்வரர் வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாது குழந்தைகள் கல்வில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்திக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.