News September 15, 2025

மயிலாடுதுறை: திமுகவில் இணைந்த 3.5 லட்சம் பேர்!

image

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அதில் முதலமைச்சர் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சம் குடும்பத்தில் உள்ள 3 லட்சத்து 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Similar News

News September 15, 2025

மயிலாடுதுறை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து செப் 17க்குள் விண்ணபிக்க வேண்டும். B.E முடித்தவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 15, 2025

மயிலாடுதுறை: 1,097 வழக்குகளுக்கு தீர்வு!

image

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நேற்று முன்தினம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளில் இருந்து சமரசத்திற்கு எடுத்து கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள் என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வழக்குகளுக்கு சமரச தீர்வின்படி மொத்தம் 1,097 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 26 லட்சத்து 70000 இழப்பீடு மற்றும் தீர்வுத்தொகை பெறப்பட்டது

News September 15, 2025

மயிலாடுதுறை: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

image

மயிலாடுதுறை திருவிழந்தூர் தீபாய்ந்த அம்மன் கோயில் அருகில் காவிரி ஆற்றின் கரையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த வீரமணி (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!