News September 5, 2025
மயிலாடுதுறை: தமிழ் கனவு நிகழ்ச்சி தொடங்கி வைத்த ஆட்சியர்

மயிலாடுதுறை ஏஆர்சி விஸ்வநாதன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சொற்பொழிவாளர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தர்மபுரம் ஞானாம்பிகை கல்லூரி முதல்வர் ரேவதி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Similar News
News September 11, 2025
மயிலாடுதுறை: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News September 11, 2025
மயிலாடுதுறை: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளிடமிருந்து குறுவை நெற்பயிர் கொள்முதல் செய்யப்படுவதை ஆய்வு செய்து கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் விவரம் மற்றும் நெல்லின் தரம் குறித்து ஆய்வு செய்தார். நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா உடன் இருந்தார்.
News September 11, 2025
மயிலாடுதுறை: கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பதவியேற்பு

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக கமலகண்ணன் நேற்று பதவி ஏற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள மண்டல இணைப்பதிவாளருக்கு கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அலுவலர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.