News April 5, 2024

மயிலாடுதுறை: தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறை

image

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News February 9, 2026

மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

மயிலாடுதுறை: வெளிநாட்டு வேலை மோசடி.. உஷார்!

image

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என, பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News February 9, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு (பெண்கள் பாதுகாப்புக்கான அலுவலக குழு) அமைக்க வேண்டும். தவறும் நிறுவனங்களுக்கு பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013ன் படி ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 04364212429 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

error: Content is protected !!