News April 5, 2024
மயிலாடுதுறை: தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறை

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 7, 2025
தபால் நிலையங்களில் ஆதார் முகாம்

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் ப்ராஜெக்ட் ஆரோ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை ஆர் எஸ், நீடூர், பேரளம் ஆகிய தபால் நிலையங்களில் ஒரு மாத காலம் ஆதார் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
News April 7, 2025
Way2News செய்தி எதிரொலி: திறக்கப்பட்ட கழிப்பறை

கடந்த மாதம் Way2News செய்தியில் சீர்காழி திருமுல்லைவாசல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதாக செய்தியானது வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது அந்த கழிப்பறை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் மகிழ்ச்சியோடு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
News April 7, 2025
JUST IN: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க..