News August 20, 2025

மயிலாடுதுறை: கோழி பண்ணை அமைக்க மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460401>>(பாகம்2)<<>>

Similar News

News August 20, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்! SBI வங்கியில் வேலை

image

மயிலாடுதுறை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>>, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

மயிலாடுதுறை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றில் 50,000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொள்ளிடம் கரையோரம் உள்ள திட்டு பகுதி கிராமங்களான திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு, திட்டு அளக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது கால்நடைகளை முன்னெச்சரிக்கையாக மேடான பகுதிக்கு கொண்டு செல்லும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!