News December 30, 2025

மயிலாடுதுறை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

மயிலாடுதுறை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

Similar News

News December 30, 2025

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை.Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<> இங்கே கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

மயிலாடுதுறை காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

image

சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் வெகுஜன விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மணல்மேடு பட்டவர்த்தியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், சமூக நீதிக்கான விளக்கம், மனித உரிமையின் வகைகள், மனித உரிமை மீறல் மற்றும் அதற்கான தண்டனைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News December 30, 2025

மயிலாடுதுறை: பசு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 15 உயர்த்தி வழங்க கூறி நேற்று பசு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!