News August 12, 2025

மயிலாடுதுறை: குறும்பட போட்டியில் வென்றவர்க்குக்கு சான்றிதழ்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், காசோலையை வழங்கினார்.

Similar News

News August 12, 2025

வங்கிப் பணிக்கான எழுத்துத் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

எஸ்பிஐ கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் மற்றும் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2/2 ஏ ஆகிய எழுத்து தேர்வு வாயிலான காலி பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை தயார் செய்யும் விதம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

மயிலாடுதுறை: ரூ.90,000 சம்பளத்தில் வேலை! APPLY

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இதனை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

மயிலாடுதுறையில் உலகப்புகழ்பெற்ற பொருள்!

image

சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் பாரம்பரியமாக செய்யப்படும் தைக்கால் பிரம்பு உலகப்புகழ்பெற்ற கலைப்பெருளாகும். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பல தலைமுறைகளாக பிரம்பைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்குக்கி வருகின்றனர். இதில் நாற்காலிகள், ஊஞ்சல்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை. இந்த கலைநயத்தை போற்றும் வகையில் இதற்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது. நம்ம ஊரு பெருமைகளை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!