News March 14, 2025

மயிலாடுதுறை: குரூப் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். அவா் நேற்று வெளியிட்ட செய்தி: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாா்ச் 17 முதல் தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் 9499055904 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

Similar News

News September 14, 2025

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

செம்பனார்கோயில், ஆறுபாதி விளநகரை சேர்ந்த அன்பரசன் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கவுடு என்ற செல்வகுமார் (26) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைத்தனர்

News September 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீஸார் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, ஆணைக்காரன் சத்திரம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News September 13, 2025

மயிலாடுதுறை: ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

மயிலாடுதுறை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!