News December 17, 2025
மயிலாடுதுறை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 22, 2025
மயிலாடுதுறை: நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து உலமாக்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இவ்வாரியம் சார்பில் திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்தினால் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
News December 22, 2025
மயிலாடுதுறை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், hrcnet.nic.in என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்
News December 22, 2025
மயிலாடுதுறையில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்!

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சஷ்டியப்த பூர்த்தி பீமரத சாந்தி சதாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்படுகின்றன. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு மலேசியா நாட்டை சேர்ந்த 44 பேர் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதில் 5 தம்பதிகள் 60 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.


