News December 21, 2025
மயிலாடுதுறை: ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக இருந்த 32 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடற்தகுதி தேர்வில் 32 பேர் கலந்து கொண்ட நிலையில் தகுதியுடைய 30 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
Similar News
News January 5, 2026
மயிலாடுதுறை: மேம்பாலம் நாளை திறப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம் காவேரி நகர் பகுதியில் மொழிப்போர் தியாகி மாணவ மணி சாரங்கபாணி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் தற்பொழுது மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
News January 5, 2026
மயிலாடுதுறை: மனைவி தள்ளியதால் கணவன் பலி!

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்
News January 5, 2026
மயிலாடுதுறை: மனைவி தள்ளியதால் கணவன் பலி!

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்


