News October 26, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News February 2, 2026
மயிலாடுதுறை: தேசிய அளவிலான போட்டியில் வென்ற இளைஞர்

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் கேரளாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி வள்ளாலகரம் ஊராட்சியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கலந்து கொண்டார். இதில் தொடர் ஓட்டம் மற்றும் ட்ரிபிள் ஜம்பில் பங்கு பெற்று 3-ம் இடம் பிடித்து 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
News February 2, 2026
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் எச்சரிக்கை

மயிலாடுதுறை மக்கள் சமூக ஊடகங்களில் உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி உங்களை கண்காணிப்பதற்காக பின் தொடர முடியும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
மயிலாடுதுறை மக்களே இது தெரியுமா!

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நதியின் வளமான டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து பழையார் வரை வங்காள விரிகுடாவின் கடற்கரையோரமாக சுமார் 70.9 கிலோமீட்டர் (44.1 மைல்) கடற்கரை நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,169.30 சதுர கிலோமீட்டர்கள் (451.47 சதுர மைல்) ஆகும். இது மாநிலத்தின் பரப்பளவில் 0.90% ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


