News October 19, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (அக்.19) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
மயிலாடுதுறை: நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து ஒரு பயனாளிக்கு மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை இரண்டு பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரியஅடையாள அட்டைகளை வழங்கினர்.
News October 19, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி துவக்கம்

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி துவங்கியது. இதனை முன்னிட்டு மயூரநாதர் சுவாமி, ஐயாரப்பர், காசி விஸ்வநாதர், தெப்பக்குள காசி விஸ்வநாதர், வதாண்யேஸ்வரர் காவிரி கரைகளில் எழுந்தருளினர். இரு கரைகளிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டு புனித நீராடினர்.