News December 31, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.30) இரவு 10 முதல் இன்று(டிச.31) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 1, 2026

மயிலாடுதுறை: ரயில் நேரமாற்றம் அறிவிப்பு

image

சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் தினசரி சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து 15 நிமிடம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் எனவும் திருச்சியில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மதியம் 12:10 மணிக்கு ரயில் புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

News January 1, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 பலி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து சாலை விபத்துகளை குறைத்திடும் பொருட்டு பொது இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பலனாக கடந்த 2024ல் பதிவு செய்யப்பட்ட 155 சாலை இறப்பு விபத்துகளை ஒப்பிடும்போது, 2025ல் 103 சாலை இறப்பு விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் குறைவாகும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News January 1, 2026

மயிலாடுதுறை: 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 27 நபர்கள், திருட்டு குற்றங்களில் – 3 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் – 14 நபர்கள், போதைப் பொருள் கடத்தல் – 1 நபர், பாலியல் குற்றங்களில் – 5 நபர் என மொத்தம் 50 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2024-ஆம் ஆண்டு 47 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!