News December 30, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.29) இரவு 10 முதல் இன்று(டிச.30) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 31, 2025

மயிலாடுதுறை: பாதுகாப்பு பணியில் 540 போலீசார்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நாளை ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் 4, காவல் ஆய்வாளர்கள் 14, உதவி ஆய்வாளர்கள் 153. காவல் ஆளிநர்கள் 263 என மொத்தம் 540 காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News December 31, 2025

மயிலாடுதுறை: மக்களே.. நாளை இதை செய்ய தவறாதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

2026 புத்தாண்டு கொண்டாடும் விதமாக இளைஞர்கள் சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, சாலையில் சாகசம் செய்வது முதலியவை போக்குவரத்து விதிமீறல் குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!