News August 27, 2025
மயிலாடுதுறை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

மயிலாடுதுறை மக்களே, மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News March 3, 2026
மயிலாடுதுறை: திமுகவில் இனைந்த மாற்று கட்சினர்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AR ராஜா ஏற்ப்பாட்டில், நேற்று முஸ்டக்குடி கிராமம் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர், அதிமுக கிளை செயலாளர் பழனி உள்ளிட்ட 75க்கும் மேற்ப்பட்டோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் உடன் இருந்தனர்.
News March 3, 2026
மயிலாடுதுறை: மின் நிறுத்தம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்க்காடு மற்றும் மூவலூர் பகுதிகளில், இன்று (மார்ச்.3) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News March 3, 2026
மயிலாடுதுறை: தேர்வு மையத்தில் ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு

சீர்காழி ஆணைக்காரன் சத்திரம் சந்தைபடுகை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (58), ஆயங்குடிபள்ளம் வெங்கடேச மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று நடைபெற்ற பிளஸ் டூ தேர்வுக்கான பறக்கும் படை அலுவலராக நியமிக்கப்பட்டு சீர்காழியில் உள்ள பள்ளியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


