News March 30, 2024

மயிலாடுதுறை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சீர்காழி அருகே திருமுல்லைவாசலை சேர்ந்த கவின்,ஜஸ்வந்த்,காளிதாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை ராதாநல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவின்,ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காளிதாஸை பொதுமக்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குளிச்சார் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் மூவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.

News October 16, 2025

மயிலாடுதுறை: உயிர் தப்பிய குழந்தைகள்

image

கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கனமழை காரணமாக அருகில் இருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உள்ளே இருந்த குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி உயிர்த்தபினர்.

News October 16, 2025

மயிலாடுதுறை: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

image

வருகிற 20-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டி கையை கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று சீர்காழி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கொள்ளிடம் முக்கூட்டு, மணிக்கூண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படையினர் சோதனை மேற்கொண்டனர்

error: Content is protected !!