News January 27, 2026

மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டு எரகலித் தெருவில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குறிப்பாக தூா்க்கணாங்குளம் பகுதிகளில் பன்றிகளின் தொல்லையால் இப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனா். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News February 6, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 3 கட்டங்களாக 130 முகாம்கள் நடைபெற்றன. முகாமில் 59,349 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 50371 ஏற்பளிக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 7849 விண்ணப்பங்களில் 4397 விண்ணப்பங்கள் ஏற்பளிக்கப்பட்டு ரூ.52,76,400 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News February 6, 2026

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

சீர்காழி அருகே உள்ள அரசூர் துணைமின் நிலையத்தில் வருகிற பிப்ரவரி 7 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் புத்தூர், எருக்கூர், மாதிரவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், அரசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

News February 6, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று(பிப்.5) இரவு முதல் இன்று(பிப்.6) இரவு வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு. உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!