News October 11, 2025
மயிலாடுதுறை அருகே புகையிலை விற்றவர் கைது

கிடாரங்கொண்டாளை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மயிலாடுதுறை தனிப்படை போலீசார், செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் அவர் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொது மக்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இணையதளத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடக கணக்குகளை பலப்படுத்த பிரைவசி செட்டிங் ஐ பயன்படுத்த வேண்டும், உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளில் இடம் (LOCATION) பதிவு செய்யும் அம்சத்தை முடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News December 13, 2025
மயிலாடுதுறை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
மயிலாடுதுறை: கோயில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்

சீர்காழி கடையில் வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட நாகேஸ்வரன் முடையார் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கட்டிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில், இடித்து அகற்றப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கோவில் நிலங்கள் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.


