News October 14, 2025
மயிலாடுதுறை: அண்ணன் இறந்த சோகத்தில் தம்பி உயிரிழப்பு

கொள்ளிடம் ,தேவநல்லூரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிகரன்(22), ஆதித்யா(21), சகோதர்களான இவர்கள் பிறவியிலேயே வளர்ச்சி குன்றியவர்கள் ஆவர். இந்நிலையில் ஹரிஹரன் 10 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட தம்பி மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் ஆதித்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News October 14, 2025
மயிலாடுதுறை: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
News October 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம், காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்தில் இருந்து வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்கள். மேலும் தகவலுக்கு ONLINE SHOPPING Cyber Crime Help Line: 1930 & Website: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 14, 2025
மயிலாடுதுறை: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.