News November 26, 2025
மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.
Similar News
News November 27, 2025
மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனையில், நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மருத்துவமனை உள்ள மக்களிடம் உதவி கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். மேலும் இங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடனிருந்தனர்.
News November 27, 2025
மயிலாடுதுறை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை ( 8838595483) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்
News November 27, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சீர்காழி நகராட்சி பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்பப் பெரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


