News December 25, 2025

மயிலாடுதுறையில் 452 பேருக்கு பணி நியமனம்!

image

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளை சேர்ந்த 1,524 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில், 20 நிறுவனங்கள் மூலம் 452 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 27, 2025

மயிலாடுதுறை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு <>TNePD<<>>S என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

மயிலாடுதுறை: தாலிக்கு தங்கம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 106 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் என ரூ. 1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 48 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News December 27, 2025

மயிலாடுதுறை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.i<<>>n என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!