News April 24, 2024
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் “பெண்ணே விழித்துக் கொள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் இன்று திரையிடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குறும்படங்களை பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை: இலவச TNPSC பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று காலை 11 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. முதன்மை தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் 9499055904 என்ற whatsapp எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 10, 2025
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது

சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் இருந்த ராமாயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், கக்ஷ உள்ளிட்ட 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை நாள் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News November 10, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


