News May 22, 2024
மயிலாடுதுறையில் தீக்குளித்த காதலி பரிதாபமாக உயிரிழப்பு

மயிலாடுதுறையில் பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கல்லூரி காதல் ஜோடி இடையே ஏற்பட்ட காதல் பிரச்சனையில் காதலி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் தீக்காயமடைந்த காதலன் ஆகாஷ் கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதலி சிந்துஜா சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் சிந்துஜா மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு வரை இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சற்று மழை ஓய்ந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 41.30 மிமீ மழை பெய்துள்ளது மயிலாடுதுறையில் 23.50மிமீ மணல்மேட்டில் 22மிமீ, கொள்ளிடத்தில் 36மிமீ, தரங்கம்பாடியில் 29.50மிமீ, செம்பனார் கோயிலில் 24மிமீ பதிவாகியுள்ளது
News December 1, 2025
மயிலாடுதுறை: மூழ்கிபோன 35,000 ஏக்கர் சாகுபடி நிலம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வடிகால்களை தூர்வாராதது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் வருங்காலங்களிலாவது வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 1, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று நவம்பர் 30ஆம் தேதி இரவு முதல், நாளை டிசம்பர் 1ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் விபரங்கள் அவர்களது தொலைபேசி எண்ணுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


