News March 13, 2025
மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 14.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Similar News
News March 7, 2026
மயிலாடுதுறை: காவலர் குழந்தைகள் காப்பகம் திறப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலர் மனமகிழ் மன்றம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட காவலர் குழந்தைகள் பகல் நேர காப்பகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி. G.ஸ்டாலின் கலந்து கொண்டு, மன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், காவலர்களின் நலன் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பராமரிப்பை உறுதி செய்வதே, இத்திட்டத்தின் நோக்கமாகுமென தெரிவித்தார்
News March 7, 2026
மயிலாடுதுறை: 16 பேர் கைது

மயிலாடுதுறை, முட்டத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி மாணவர்கள் ஹரிஷ்ம் ஹரிசக்தி ஆகியயோர் கொலை செய்யப்பட்டனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், அரசு சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதும் நிறைவேற்றவில்லை என நேற்று பாதிக்க ப்பட்டவர்கள் கலெகடர் அலுவகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 16 பேரை போலீசார் கைது செய்தனர்
News March 7, 2026
மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் (மார்ச்.06) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


