News June 22, 2024
மயிலாடுதுறையில் ”டிஜிட்டல் திரை”

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் பகுதியில் ரயில்களின் விபரம் உள்ளிட்டவற்றை காட்டும் ”டிஜிட்டல் திரை” கடந்த சில மாதங்களாக சரிவர இயங்கவில்லை என பயணிகள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிஜிட்டல் திரைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News August 17, 2025
தென்பாதி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சீர்காழி தென்பாதியில் உள்ள சாலைகரையாள் எனும் மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து அபிராமி அந்தாதி தேவார பாராயணம் செய்து 108 போற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்து திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
News August 17, 2025
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிளஸ் 2 மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு அருவாபாடி பகுதியை சேர்ந்த வீரப்பன் (28)என்பவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
News August 17, 2025
சமூக நலத்துறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர்

மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி திட்டத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் நிதி ஒதுக்கீடு போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.