News May 19, 2024

மயிலாடுதுறையில் ஆலோசனை கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் கடலோர ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி குளங்களை தூர்வாரி, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் நடவடிக்கைகள் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

Similar News

News March 4, 2026

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

image

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருவிடைக்கழி ஊராட்சி ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமுருகன் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் அழகிரிசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் அவர்களுக்கு கட்சித்துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார் நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர

News March 4, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்காக 38450 எக்டர் நிர்ணயம் செய்யப்பட்டு 39,702.375 எக்டர் குறுவை சாகுபடி முடிக்கப்பட்டுள்ளது. சம்பா தாளடி 66768 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 68640 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025ம் ஆண்டிற்கு மொத்த நெல் சாகுபடி 105340 இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 108386 சாகுபடி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

மயிலாடுதுறை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 14-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதில் சிவில், குற்றவியல், வங்கிக்கடன், மோசடி, வங்கி சார்ந்த வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்தந்த கோர்ட்டுகளின் எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த கோர்ட்டுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!