News October 22, 2025
மயிலாடுதுறையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொய்வின்றி நெல் கொள்முதல் செய்யும் பணிக்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
Similar News
News January 26, 2026
மயிலாடுதுறை மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
மயிலாடுதுறை: போலீசார் தீவிர சோதனை

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மாவட்ட காவல் துறையினர் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ரயில் நிலையம் வழிபாட்டு தலங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.
News January 26, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தின் மழையளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு விவரங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


