News April 2, 2024

மயிலாடுதுறை:பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரண நிதி வழங்கல்

image

சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் பாதிக்கப்பட்ட கரிகாலன் என்பவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் ரூ. 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவியினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

மயிலாடுதுறை காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். இணையத்தில் உங்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கபட்டது. மேலும் தகவல்களுக்கு Cyber Crime Help Line: 1930 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in இணையத்தளம் வாயிலாக புகாரளிக்கலாம்.

News October 16, 2025

மயிலாடுதுறை: 2 கிலோ குட்கா பறிமுதல்

image

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி உத்தரவின்படி போலீசார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டதில் 2கி குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த மயிலாடுதுறை பொட்டவெளி தெருவை சேர்ந்த பிரசாந்த் 35 என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News October 16, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு சம்பா சிறப்பு பருவம் நெல் ll பயிருக்கு காப்பீடு செய்யலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சிறப்பு பருவ பயிருக்கு 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. வருகிற 15.11.2025 வரை காப்பீடு செய்யலாம் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 547.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!