News March 25, 2024
மமக ஆலோசனை கூட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் மாநில துணை பொதுசெயலாளர் யாக்கூப் தலைமையில் 6 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News January 28, 2026
செங்கை: அண்ணனின் விரலை கடித்து துப்பிய தம்பி

மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் (ம) தினேஷ் அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் வீட்டு வாசலில் காரை நிறுத்துவது தொடர்பான பார்க்கிங் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் பிரச்சனை முற்றிய நிலையில் அண்ணன் தினேஷின் விரலை தம்பி ராஜேஷ் கடித்து துண்டாக்கி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
செங்கை: EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.!
News January 28, 2026
வண்டலூர்: கோயில் குளத்தில் மிதந்த சடலம்!

வண்டலூர் கங்கை அம்மன் கோவில் குளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அவர் வண்டலூர் வாலாஜாபாத் சாலையைச் சேர்ந்த டிபன் கடை உரிமையாளர் லோகநாதன் (60) என்பது தெரிந்தது. உடல்நலக் குறைவால் மனமுடைந்த அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


