News March 30, 2025
மன வருத்தத்தில் தற்கொலை

வந்தவாசி அருகே கடம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (58) இவரது மகள் சத்தியவாணிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வருத்தத்தில் நேற்று முன்தினம் தூக்கு போட்டுகொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News April 2, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

தி.மலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 1, 2025
உங்கள் குடும்பத்திற்கு வற்றாத செல்வம் தரும் சிறந்த தலம்

தி.மலை மாவட்டம், தி.மலையில் பிரசித்திபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இது தி.மலையின் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 1, 2025
அடையாள எண் பெற பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 1061 கிராமங்களிலும் நில உடைமைகளை சரிபார்த்தல் பணிகள் 8.2.2025 முதல் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற தனித்துவமான அடையாள எண் பெற மார்ச் 30ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. நிலையில் தற்போது வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.