News July 10, 2024
மன உளைச்சல் அடைந்தேன்: சி.அன்புமணி

திமுகவைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் இன்னும் தொகுதிக்குள்ளேயே உள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பனையபுரம் வாக்குசாவடியில் வாக்கு செலுத்திய பின் பேசிய அவர், எனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக வந்த செய்தியை கேட்டு மன உளைச்சல் அடைந்தேன். 20 வாக்குச்சாவடிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். பாமகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
Similar News
News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
விழுப்புரம் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 7 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 3 நகராட்சி
▶️ 7 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 9 வட்டங்கள்
▶️ 929 வருவாய் கிராமங்கள்
▶️ 688 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 13 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News August 24, 2025
திண்டிவனம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

திண்டிவனம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று நகராட்சி பொறியாளர் சரோஜா முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.