News May 8, 2024
மன்னார்குடி: 18, 19 தேதிகளில் கல்வி கண்காட்சி

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி மே.18, 19 ஆகிய தேதிகளில் தேசியப் பள்ளியில் நடைபெற உள்ளது. சென்னை, கோவையை சேர்ந்த 40 கல்லூரிகள், 10 பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. வங்கி கடன் வசதிகளுக்கு வழிகாட்டுதல் தரப்படும் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
திருவாரூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04366-223100 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 6, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
திருவாரூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <