News March 17, 2025
மன்னார்குடி செங்கமலத்திற்கு ரூ.14 லட்சத்தில் கருங்கல் சிலை

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் 50ஆண்டுகள் ஆன்மிக பணியாற்றி மறைந்த செங்கமலம் யானைக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நிறுவப்பட உள்ள கருங்கல் யானை சிலை நேற்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் ஆன்மிக பணியாற்றி மறைந்த யானைகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 7, 2025
திருவாரூர்: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 139 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974188>>(பாகம்-2)<<>>
News July 7, 2025
திருவாரூர்: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (2/2)

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
திருவாரூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஓட்டக்குடி பகுதியில் வசிப்பவர் சுஜாதா (33). இவரது கணவர் பிரபாகரன் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி செல்போன் வாயிலாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுஜாதா சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.