News August 16, 2025
மனைவி ஸ்கூட்டருக்கு தீ வைத்த கணவர் மீது வழக்கு

சந்தைப்பேட்டையை சேர்த்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு வசந்தியுடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் வசந்தி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வசந்தி வீட்டிற்கு சென்ற ஜாகீர் உசேன், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். வசந்தியின் புகாரின் பேரில் ஜாகீர் உசேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News August 16, 2025
கள்ளக்குறிச்சியில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கள்ளக்குறிச்சி கோட்டைமேடுவில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை சுயம்புவாக தோன்றியது என நம்பப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க!
News August 16, 2025
முதல்வர் கோப்பை போட்டிக்கான முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு

தமிழக முதல்வர் கோப்பை – 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முன்பதிவு செய்ய இறுதி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வீரர்கள் மற்றும் அணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
News August 16, 2025
கள்ளக்குறிச்சில்: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

உ.நெமிலியை சேர்ந்த மாரியும், ஆனந்தன் என்பவரும் ஒரே ஊர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மாரியின் வீட்டில் உள்ள வேப்பமர கிளை ஆனந்தன் வீட்டின் பக்கம் சென்றதால் ஆனந்தன், பழனிவேல், காசிராஜன், உண்ணாமலை, தமிழ்மணி ஆகியோர் சேர்ந்து அதை வெட்டியுள்ளனர். இதை கேட்ட மாரியை அனைவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 5 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.