News May 30, 2024
மனைவியை கொலை செய்த கணவர் கைது

எண்ணூர், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவரது மனைவி ராஜலெட்சுமி (25). நேற்று தம்பதிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் ராஜலட்சுமியை குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை இன்று கைது செய்தனர்.
Similar News
News July 7, 2025
திருவள்ளூரில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை9ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும், திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை உள்ளிட்ட 10 துறைகள் தொடர்பான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News July 7, 2025
சென்னை விமான நிலையத்தில் +2 முடித்தால் போதும் வேலை ரெடி

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த <