News March 20, 2025
மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.
Similar News
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: மழைக்காலம் வர போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

கள்ளக்குறிச்சி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு வெளிய போக பிளான் ஏதும் இருக்கா…? அப்போ இதை பாருங்க
கல்வராயன் மலை: இது இம்மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஏழைகளின் கொடைக்கானல் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
மேகம் அருவி: கல்வராயன் மலையில் உள்ள ஒரு அழகிய அருவி.
கோமுகி அணை: கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் ஓய்வு இடம்.
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த வீடு கட்ட போறீங்களா??

கள்ளக்குறிச்சி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <