News April 1, 2025
மனைவியுடன் வீடியோ காலில் பேசியபடி கணவர் தற்கொலை

புவனகிரியை சேர்ந்த உசேன் ஷெரிப் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியாங்குப்பம் வேலன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரம்ஜான் கொண்டாட புவனகிரிக்கு சென்ற அவரது மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியபடி மனைவியின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 2, 2025
நோய் நொடியை தீர்க்கும் புதுவை லிங்கேஸ்வரர் ஆலயம்

புதுவை கண்டமங்கலம் அருகே நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது சோழர் கால கோயிலாகும். இங்குள்ள நவகிரகங்கள் கருவறையில் உள்ள சிவனை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர். இங்குள்ள சிவனை வணங்கினால் திருமணத் தடை, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, இழந்த செல்வம் திரும்பப் பெறல், தம்பதி இடையே ஒற்றுமை, நோய் நொடியின்றி நீண்ட வாழ்வு பெறுதல், ஆகியவை அமையும் என்பது நம்பிக்கை. நண்பர்கள் & உறவினர்களுக்கு பகிரவும்
News April 2, 2025
புதுச்சேரியை சேர்ந்தவர் கடலூரில் என்கவுண்டர்

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
News April 2, 2025
கார்கள் நேருக்கு நேர் மோதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.