News March 27, 2024
மனிதநேயத்திற்கான அமைதி கட்சி வேட்பு மனு தாக்கல்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.27) பல்வேறு அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மனிதநேயத்திற்கான அமைதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சர்ச்சில் துரை தனது வேட்பு மனுவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.
Similar News
News November 3, 2025
போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 3, 2025
தேனி: குடிப்பழகத்தால் பறிபோன உயிர்

போடி குப்பிநாயக்கன்பட்டி மருது பாண்டியர் தெருவை சேர்ந்தவர்கள் ராஜபிரபு (35) – கீர்த்தனா (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராஜபிரபு மது பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் உள்ள பொருட்கள், குழந்தைகளின் கொலுகளை விற்று மது குடித்துள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
News November 3, 2025
தேனி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

தேனி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <


