News November 23, 2024

மனநல மருத்துவ சிறப்பு முகாம்: நோட் பண்ணிக்கோங்க

image

செம்பியம், தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, ஜாபர்கான்பேட்டை, முகலிவாக்கம், கோட்டூர்புரம், சத்தியமூர்த்தி நகர், திருவான்மியூர், மாதவரம், அயனாவரம், லட்சுமிபுரம், சைதாப்பேட்டை, கிழக்கு முகப்பேர், ஷெனாய் நகர், இ.சி.ஆர்., எம்.எம்.ஏ. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மனநல மருத்துவ சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News August 5, 2025

சென்னையில் பால் விற்பனை உயர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ்

image

நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் (ம) மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின் அவர் பேசுகையில், சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.

News August 5, 2025

அம்பத்தூரில் ஷாக்கான குடும்பம்!

image

அம்பத்தூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டில் 2 மாதத்திற்கு ஒருமுறை சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் வீட்டில் ஜூன், ஜூலை மாத கணக்கீட்டின்படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.91,993 மின்கட்டணம் வந்துள்ளது. இதை கண்டு அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

News August 5, 2025

பெசன்ட் நகர் பீச்சில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

image

சென்னை IT நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களோடு நேற்று பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றுள்ளார். அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் சாய் கிரிதரன் தனது நண்பர்களோடு கடற்கரைக்கு சென்ற போது, அங்கு இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கறிஞர் சாய்கிரிதரணை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!