News April 18, 2025
மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 5, 2025
கிருஷ்ணகிரிக்கு புதிய முதன்மைத் அலுவலர் நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) A.முனிராஜ் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அறிவிக்கப்பட்டுள்ளார். பின் விருதுநகர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் இரா.மதன்குமார் தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நேற்று (நவ.04) நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 5, 2025
கிருஷ்ணகிரி: ஆசிரியருக்கு பாய்ந்த போக்சோ

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் நேற்று (நவ.04) கைவினை கலை ஆசிரியரான சின்னமட்டாரப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (49), மாணவியரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதன்படி பள்ளி சி.இ.ஓ விசாரணை செய்தபோது மாணவியின் புகார் உண்மை என தெரியவந்தது. பின் முருகேசனை பர்கூர் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


