News January 9, 2025
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் 10 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மற்றும் படகை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய மத்திய வெளியுவுத்துறை அமைச்சருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News September 11, 2025
புதுவையில் இன்றைய மின்தடை பகுதிகள்

புதுச்சேரியில் கண்டமங்கலம் துணை மின் நிலையம், கிருஷ்ணா நகர், அரியாங்குப்பம் ஆகிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செப்டம்பர் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணா நகர், செந்தில் நகர், மடுவுப்பேட்டை , ரெயின்போ நகர் பி.எஸ் பாளையம், பள்ளித்தென்னல், அரங்கநாதபுரம், கோண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அணைவியாருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
புதுவை: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு தகவல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தின விழா அறிவிப்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, இண்டக்சன் ஸ்டவ் மற்றும் குக்கர் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை ஒட்டி வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளோ அல்லது அவருடைய வாரிசுகளோ பென்ஷன் அடையாள அட்டை காட்டி இலவச அன்பளிப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
News September 11, 2025
புதுவை: கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான தேர்வு தேதி

புதுவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (21.09.2025) அன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in இணையதளத்தில் இன்று பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!