News August 3, 2024
மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன்?

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் இன்று பேசிய அவர், ஆளுநருக்கு மீண்டும் பதவி வழங்குவது மத்திய அரசின் நிலைபாடு என்றார். பிரதமர் அரசியலமைப்பு படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறார். ஆனால், வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 22, 2026
சென்னையில் துடிதுடித்து பலி

சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜன-22) காலை காய்கறி வாங்க அரும்பாக்கத்தில் இருந்து ராசு (58) என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கோயம்பேடு அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து கோயம்பேடு போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News January 22, 2026
மெரினாவில் 300 கடைகள் மட்டும் தான்!

மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி என். பால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி. மோகன்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற துணை பதிவாளர் ஆர். ரங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் 300 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
BREAKING: சென்னை மெட்ரோ சேவையில் கோளாறு

சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் முறையில் நேற்று இரவு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள், சி.எம்.ஆர்.எல். கவுன்டர்கள் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


